இந்திய ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் தேவைக்காக சில்லறை கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்திள்ளது.இதற்காக ரிசர்வ் வங்கியானது பிப்ரவரி 10,2020 தேதி முதல் இணையதளத்தில் வந்த மக்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 18,2020 -இல் அறிவித்துள்ளது.
இதற்கான இணையதள வசதிகளை வழங்குவதற்கான புதிய நிறுவனங்களை பிப்ரவரி 26,2020 தேதி வரை அனுமதிக்கப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணவர்த்தனை மிக வேகமாக நடைபெறும் என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்நிறுவனங்கள் வெளி ஆலோசனைக் குழு [External Advisory Committee (EAC)] கீழ் இவை செயல்படும் என்று அறிவித்துள்ளது.
இவை அனைத்தும் கொடுப்புனர்வு மற்றும் தீர்வு முறைகளின் வாரியம் (Board for Regulation and Supervision of Payment and Settlement Systems) கட்டுப்பாட்டின் கீழ் இந்த நிறுவனங்கள் தனது புதிய வரையறைகளை (ATM) அறிமுகப்படுத்தும்.
இதன் மூலம் குறைந்தது Rs 500 கோடி முதல் பண வர்த்தனை செய்யும் வசதி உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதில் வெளிநாட்டு பணம் கொடுக்கள் வாங்கள் அனைத்தும் அதில் சம்மந்தப்பட்ட இந்திய குடிமக்களின் கட்டுப்பட்டில் கீழ் மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999 கீழ் செயல்படுவதன் மூலம் மிகவும் பாதுகாப்பான மற்றும் வேகமான சில்லறை கொடுப்பனவு நடைபெறும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்மைகள் :
1. இந்த முறையின் மூலம் வங்கிகளுக்கும் ,வாடிக்கையாளர்களுக்குமான கொடிக்கல் வாங்கள், குறைந்த செலவில் நடைபெரும் மற்றும் பணவர்த்தனை வேகமாக நடைபெறும்.
2 .வங்கி வாடிக்கையாளர்களின் 24x7 நேரம் மற்றும் ஆண்டின் 365 நாட்களிலும் இலத்திரனியல் கொடுப்பனவு (Electronic payments) முறையின் மூலம் சில்லறை பணவர்த்தனை செய்ய முடியும் ,அப்படி செய்யும் பணவர்த்தனை அனைத்தும் மிக வேகமாக நடைபெறும்.
3 .இதன் மூலம் நாடுகளுக்கு இடையே மிக இலகுவான,வர்த்தகச் சந்தையை விரிவுபடுத்த முடியும் .
கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் :
1. Visa, Master, Mastro என விதம் விதமான அட்டைகளின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அனைத்து வங்கிகளுமே ஒரே வகை நிறுவனத்தின் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. அவை, தமது வசதிக்கேற்ப, வேறுபட்ட நிறுவனங்களை தேர்ந்தெடுக்கின்றன. விளைவு, அனைத்துவகை வாடிக்கையாளர்களையும் கவர, வர்த்தக நிறுவனங்கள் அனைத்துவகை நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்களை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கான செலவு என்பது மிக அதிகமானது.
2 .இணையவழி கொடுக்கல்,வாங்கல்களை நிறுவுவதற்கான மூலதனச் செலவு, பராமரிப்புச் செலவு, மாதாந்த அல்லது வருடாந்த கொடுப்பனவு போன்றவை சிக்கல் நிறைந்த நெறிமுறையாகும்,